2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய மாணவர்கள்

Editorial   / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பள முரண்பாடு, சேவை தரம் உள்ளிட்ட மேலும் பல  கோரிக்கைகளை முன்வைத்து, 30 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் நாடளாவிய ரீதியில், இன்று (26) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், பாடசாலைகளுக்கு வருகைதந்த மாணவர்கள் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறாததால் வீடு திரும்பியுள்ளனர்.

தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் 90 சதவீதமான ஆசிரியர்கள் இன்று கடமையில் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், களுத்துறை மாவட்டம் உள்ளிட்ட வேறு சில பகுதிகளில், பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததால், பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .