2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா

J.A. George   / 2021 ஏப்ரல் 28 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,111 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் நாட்டில் அதிகளவில் தொற்றாளர்கள் பதிவாகிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 487 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் 94 ஆயிரத்து 856 பேர் குணமடைந்துள்ளனர். 7 ஆயிரத்து 976 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதேநேரம், 655 பேர் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .