R.Tharaniya / 2025 நவம்பர் 05 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல் மற்றும் நடைமுறை ரீதியான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்தும் ஒரு ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலுக்காக,எதிர்க்கட்சித்தலைவர் சஜித்பிரேமதாச,மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்தார்.
நிறுவன ரீதியான தொழில் முறையை மேம்படுத்துதல்,சட்டமன்ற ஆராய்ச்சியை வலுப்படுத்துதல் மற்றும் அந்தந்த பாராளுமன்றங்களுக்குள் இளைஞர் ஈடுபாட்டை ஊக்குவித்தல் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
கட்டமைக்கப்பட்ட பரிமாற்றங்கள்,ஆய்வு வருகைகள்மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் இலங்கை பாராளுமன்றத்திற்கும் மக்களவைக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பாராளுமன்ற ஒருமைப்பாடு ஆகியவற்றின் மதிப்புகளுக்கு இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் உறுதிப்பாட்டை இந்தச் சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டியது.
கலந்துரையாடல்களை தொடர்ந்து,புதிய மக்களவை வளாகத்தின் விரிவான சுற்றுப் பயணத்தை எதிர்க்கட்சித் தலைவருக்கு சபாநாயகர் அலுவலகம் வழங்கியது,அதன் அதி நவீன வசதிகள் மற்றும் முழுமையாக டிஜிட்டல்,காகித மற்ற பாராளுமன்ற செயல்பாடுகள்,சட்ட மன்ற நிர்வாகத்தில் நவீன மயமாக்கல் மற்றும் செயல் திறன் ஆகியவற்றின் மாதிரியைக் காட்டியது.



26 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026