2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஓய்வு பெறுகிறார் தர்ஜினி சிவலிங்கம்

Simrith   / 2023 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  

”இலங்கை வலைப்பந்தாட்டத்திற்கு நான் பல வருடங்களாக பங்களித்துள்ளேன். இப்போது எனக்கு 45 வயதாகி விட்டது. ஆசியாவில் எந்தப் பெண் வீராங்கனையும் நான் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் ஈடுபட்ட அளவிற்கு ஈடுபட்டிருக்கவில்லை. 2023 உலக வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளின் பின் ஓய்வு பெற நான் தீர்மானித்துள்ளேன்” என உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி எமது சகோதர ஊடகமான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .