2025 ஜூன் 30, திங்கட்கிழமை

’கடைசி விளிம்புவரை மீட்பு பணி தொடரும்’

Editorial   / 2019 ஒக்டோபர் 28 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 63 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அங்கு செய்தியாளர்களை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று (28) சந்தித்தார்.

அவர் கூறும்போது, “ஜெர்மன் இயந்திரம் மூலம் குழி தோண்டியும் பலனில்லை. கடினமான பாறைகள் இருக்கின்றன. குழந்தையின் மீது மண் மூடியிருக்கிறது. இது தொழில்நுட்ப நடவடிக்கை.நிபுணத்துவம் கொண்ட குழு இதில் பங்கெடுத்து வருகிறது.

குழந்தை 88 அடியில் இருக்கிறது. நாங்கள் 98 அடி தோண்டி, பிறகு குறுக்கே குழி தோண்ட முடிவு செய்துள்ளோம். அது விரைவில் முடியும் என்று நினைத்தோம். ஆனால், பாறைகள் காரணமாக அதன் நேரம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

தொடர்ந்து தோண்டினால் கரிசல் மண் தென்பட வாய்ப்பு இருக்கிறது என கூறுகிறார்கள். அதனால் தொடர்ந்து தோண்டுவோம். மீட்புப் பணியை எந்தவிதத்திலும் கைவிடமாட்டோம். கடைசி விளிம்புவரை எங்கள் பணியை தொடர்வோம். இந்தப் பணி முடிய 12 மணி நேரம் ஆகலாம்” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X