Gavitha / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டுப் புலனாய்வு சேவையுடன் தொடர்புடையவர்கள், தனக்குப் பின்னால் இருந்தால், அது தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கமாறு, அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
அவ்வாறு யாரேனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், பொலிஸ்மா அதிபரூடாக வாக்குமூலம் பெறப்பட்டு, விசாரணை நடத்தப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாமல், ஜனாதிபதி செயலகத்தில் மாத்திரம் ஜனாதிபதி இருப்பது, கட்சிக்கும் ஆட்சிக்கும் சரியில்லை என்ற ஒரு காரணத்துக்காகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்ப் பதவியை, ஜனாதிபதி ஏற்கவேண்டும் என்று தான் கூறியதாகவும் இதன்மூலம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அகற்றப்படவேண்டும் என்ற அர்த்தம் உருவாக்கிக்கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியை, ஆட்சிக்கு கொண்டுவரவும் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்யவும் முன்னின்று செயற்பட்டது தவறு என்றால், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026