Editorial / 2026 ஏப்ரல் 13 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிங்கள மற்றும் இந்து புத்தாண்டை முன்னிட்டு நிலவும் புண்ணிய காலப்பகுதியைக் கருத்திற் கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் இரண்டு பிரதான பூசைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பஸ்நாயக்க நிலமே அலுவலகம் அறிவித்துள்ளது.
எனவே, பூசை நடைபெறாத நேரங்களில் வரிசையில் நின்று அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டாம் என பஸ்நாயக்க நிலமே திலிண மதுசங்க பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வருடாந்தம் நடைபெறும் சித்திரை திருவிழா ஊர்வலம் நாளை (14) இரவு 7:45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
ஊர்வலம் நிறைவடைந்து தேவாலயத் தேவா பணிகள் முடிந்த பின்னரே, மீண்டும் பக்தர்களின் பூசைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
34 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
50 minute ago
1 hours ago