Editorial / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை, தொடங்கொட பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து பொலிஸ் சீருடைகள், துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 48 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவை பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தொடங்கொட மற்றும் களுத்துறை பிரதேசங்களை சேர்ந்த 25 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026