2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கொம்பனிவீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

Editorial   / 2019 நவம்பர் 06 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொம்பனிவீதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (05) இரவு 9.15 முதல் 9.40 வரையான காலப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இலக்கம் 177, தர்மபால மாவத்தை, கொழும்பு 02 என்ற முகவரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைதுசெய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில், கொம்பனிவீதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .