2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொரோனாவால் 4,054 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2021 ஜூலை 24 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 52  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

26 ஆண்களும் 26 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  4,054 பேர் உயிரிழந்துள்ளனர்

இதேவேளை, நாட்டில் மேலும் 1,220  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 294,333 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 957 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி,  266,665 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 23,709 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X