2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் காற்று மாசடைதல் அதிகரிப்பு

Editorial   / 2019 நவம்பர் 13 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் புதுடெல்லியில் ஏற்பட்ட காற்று மாசடைதல் காரணமாக,  கொழும்பு நகரில் காற்று மாசடைவது மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரின் தூசு துகள்களின் செறிவுச் சுட்டி தற்போது 100 ஆக பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட புவிசரிதவியலாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், சுவாச ​நோயாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் திறந்தவௌியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X