2025 ஜூலை 02, புதன்கிழமை

சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்

Editorial   / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சைகள் இன்று (02) ஆரம்பமாகியுள்ளதுடன், எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், 4 இலட்சத்து 33 ஆயிரத்து 50 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 

அத்துடன், 2 இலட்சத்து 83 ஆயிரத்து 958 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக  மொத்தமாக, 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு பேர் பரீட்சை எழுத தகுதிப்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு சென்ற பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .