Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 25 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற வானிலையால் 8 மாவட்டங்களில் 20,815 குடும்பங்களை சேர்ந்த சுமார் 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக, கம்பஹா மாவட்டத்தில் 43 000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.
வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட 14,899 பேர், 42 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
களு மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்துள்ளதுடன், அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் பிரிவு பணிப்பாளர் மாலா அலவத்துகொட தெரிவித்துள்ளார்.
மழையுடனான வானிலையால் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (25) மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, புளத்சிங்கள, வலல்லாவிட்ட, மத்துகம, அகலவத்த ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நியாகம, நாகொட, இமதுவ, பத்தேகம ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை யட்டியந்தொட்டை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் மாத்தறை பிட்டபெத்தர மற்றும் அத்துரலிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, இங்கிரிய, பாலிந்தநுவர மற்றும் ஹொரணை பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தின்
தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் நெலுவ, தவளம ஆகிய செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, அயகம, கிரியெல்ல, பெஹலியகொட, இரத்தினபுரி மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளுக்கு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், அதனை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலை நாளை (26) முதல் குறைவடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago