R.Tharaniya / 2025 நவம்பர் 30 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடுமையான வானிலை காரணமாக ஏற்பட்ட பரவலான பேரழிவை இலங்கை தொடர்ந்து சந்தித்து வருவதால், ஜப்பான் அவசர உதவிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
ஜப்பானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, இலங்கையின் உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மூலம் ஒரு மதிப்பீட்டுக் குழு அனுப்பப்படும். நாட்டின் அவசர மருத்துவத் தேவைகளை மதிப்பிடும் மற்றும் ஜப்பானிய பேரிடர் நிவாரணக் குழுவின் சாத்தியமான பணியமர்த்தலை ஒருங்கிணைக்கும் மருத்துவ அதிகாரிகள் இந்தக் குழுவில் அடங்குவர்.
கூடுதலாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்க ஜப்பான் JICA மூலம் அத்தியாவசிய அவசர நிவாரணப் பொருட்களை - கூடாரங்கள், போர்வைகள் மற்றும் பிற பொருட்களை - வழங்கப்படும் என ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026