Editorial / 2025 நவம்பர் 26 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற காரில் மோதி தெருநாய் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணை டிசம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம நீதவான் ராஜிந்திர ஜெயசூர்ய, புதன்கிழமை (26) அன்று உத்தரவிட்டுள்ளார்.
பன்னிப்பிட்டிய வித்யால சந்திப்பில் உள்ள அலுபோகஹவத்த சந்து அருகே வசித்து வந்த இறந்த தெருநாய், சந்தேக நபரான அப்பெண், நவம்பர் 14 ஆம் திகதியன்று ஓட்டிச் சென்ற காரில் மோதி இறந்துள்ளது.
உள்ளூர்வாசிகள் மற்றும் விலங்கு உரிமை அமைப்புகள் கொட்டாவ காவல்துறையில் அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபரான அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெருநாய் மரணம் வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலை என்று கூறினர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்தப் பெண், பன்னிப்பிட்டிய, கொட்டாவ, தெல்கஹவத்த பகுதியைச் சேர்ந்த இஷானி சில்வா ஆவார்.
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago