2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’நீதிமன்ற உத்தரவின்றி கைதுசெய்ய முடியாது’

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை, நீதிமன்றத்தின் உத்தரவின்றி கைது செய்ய முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்ற இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

தான் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கிஹான் பிலபிட்டியவால்  ரிட் மனு சமர்பிக்கப்பட்டது.

குறித்த ரிட் மனு,  மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச்.எம் நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்ற உத்தரவின்றி மனுதாரரை கைது செய்ய முடியாது என, சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .