2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பெட்டிகளில் அடைக்கப்பட்டவாறு பறவைகளை கொண்டுவந்த நபர் கைது

Editorial   / 2018 நவம்பர் 18 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக பெட்டிகளில் அடைக்கப்பட்டவாறு லவ் பேர்ட்ஸ் பறவைகள் மற்றும் கிளிகள் சிலவற்றை கொண்டுவந்த நபரொருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (17) சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் சிலாபம், கட்டுனேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரென்றும், குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்ட ப்ளாஸ்டிக் பெட்டிகளிலிருந்து, லவ் பேர்ட்ஸ் பறவைகளும் மற்றும் கிளிகள் சிலவும் காணப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பறவைகளின் பெறுமதி 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்றும் அதிகாரிகள்  மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .