S. Shivany / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைக்குச் சென்ற முதல் நாளே விபத்தில் சிக்கி 6 வயதுடைய சிறுவன் பலியாகியுள்ள சம்பவம், பதுளையில் இன்று(15) பதிவாகியுள்ளது.
பாடசாலைக்குச் சென்றபோது கனரக வாகனத்துடன் மோதுண்டே இச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை- அசேலபுர பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பதுளை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு இவ்வருடம் முதலாம் தரத்துக்கு சேர்க்கப்பட்ட மேற்படி சிறுவன், இன்று முதல் நாளாக பாடசாலைக்குச் சென்றபோதே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .