2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மூன்று வீரர்களுக்குப் போட்டித்தடை

Nirosh   / 2021 ஜூலை 29 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்போது ஒழுக்க விதி மீறலில் ஈடுபட்ட, இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு போட்டித்தடை, அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவே இவ்வாறு, இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான தனுஸ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நிரோஷன் திக்வெல்லவுக்கு 18 மாதங்களும், ஏனைய இரு வீரர்களுக்கும் 24 மாதங்கள் கிரிக்கெட் தடையும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .