2024 மே 02, வியாழக்கிழமை

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகளை வழங்கும் சீனா

J.A. George   / 2021 ஜூலை 15 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா மேலும் ஒரு தொகை ‘சினோபார்ம்’தடுப்பூசிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

16 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் கூறியுள்ளது.

இதேவேளை ஏற்கெனவே கொள்வனவு செய்துள்ள மேலும் 2 மில்லியன் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளன.

இதனை, ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகள் கிடைத்த பின்னர் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேலும் விரைவுபடுத்த முடியும் என்று இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .