Kanagaraj / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்
கொட்டகலை டிரேட்டன் கே.ஓ பிரிவை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலு சந்திரபோஸ் (வயது 40), கொட்டகலை ரயில்வே கடவைக்கு அருகில் வைத்து, ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளார்.
இந்த சம்பவம், இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று, திம்புள்ளை- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து பதுளையை நோக்கிப் பயணித்த ரயிலிலேயே, அவர் மோதுண்டு பலியாகியுள்ளார்.
மரண விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக, கொட்டகலை வைத்தியசாலைக்கு சடலம், கொண்டு செல்லப்படவுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago