2025 மே 19, திங்கட்கிழமை

24 மரக்குற்றிகளுடன் வியாபாரி கைது

Thipaan   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ காட்டு பகுதியில்,  இருபத்து நான்கு மரக்குற்றிகளுடன் வியாபாரி ஒருவரை, நேற்றுப் புதன்கிழமை (17) மாலை கைது செய்துள்ளதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை கல்மெட்டியாவை பகுதியைச் சேர்ந்த தரகு கும்ர ஆரியரட்ண என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரிடமிருந்து, முதிரை, சமண்டலை, தேக்கு, வேம்பு போன்ற மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

அத்துடன், மரங்களை வெட்டும் ஆயுதங்களையும் மரம் கத்தரிக்கும் இயந்திரங்கள் நான்கையும் அவரிடமிருந்து மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தநபர், காட்டு மரங்களை விற்பனை செய்ய வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, கல்மெட்டியாவ காட்டுப்பகுதிக்கு விரைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது, அவரிடம் காட்டு மரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்நபர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நபரை, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில்,இன்று (18) ஆஜர்படுத்தவுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X