2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

திருமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி தேசியபாடசாலை தின ஊர்வலம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கஜன்)

திருகோணமலை  ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி தேசியபாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதன் 19 ஆவது நிறைவையொட்டி ஆசிரியர், மாணவர் ஊர்வலம் நடைபெற்றது.

இதன்போது தரம் 1 முதல் 5 தரம் வரை கல்வி கற்கும் சுமார்  800 மாணவர்கள் இவ் ஊர்வலத்தில்  பங்கேற்றனர்.

ஆரம்ப  பிரிவு உதவி அதிபர் ந.சங்கரதாஸ்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  கல்லூரி அதிபர் இ.புவனேந்திரன், முன்னாள் அதிபர் மா.இராஜரெட்ணம், மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க  உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், முன்னாள ஆசிரியர்கள், அலாயன்ஸ் பினான்ஸ் நிறுவனத்தின் திருகோணமலை கிளை முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த 1993ஆம் வருடம் இப்பாடசாலை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .