2025 ஜூன் 25, புதன்கிழமை

ஆசிரியரை தீண்டிய பாம்பு

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வெருகல், மாவடிச்சேனை வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், பாம்பு தீண்டிய நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாக்கியராசா தயாபரன்(44) எனும் குறித்த ஆசிரியர் வெள்ளிக்கிழமை(30) மாலை அவரது வயலில் பசளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பாம்பு தீண்டியுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அவர் மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். தீவிர சிசிக்சைகளுக்கு பின்னர், ஆசிரியர் தற்போது குணமடைந்து வருவதாக உறவினர்கள்; தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .