2025 ஜூன் 25, புதன்கிழமை

உணவுகளை கையாளுதல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்
, எஸ்.சசிகுமார்

திருகோணமலை சுகாதார வைத்திய பிரிவில் உள்ள உணவக உரிமையாளர்களுக்கு, உணவுகளை  கையாளுதல் மற்றும் தர நிர்ணயம் தொடர்பாக விளக்கமளிக்கும் முதலாவது  விசேட கலந்துரையாடல் திருகோணமலை  சனசைன் ஹோட்டலில் இன்று (16) காலை நடை பெற்றது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே .விஜய குமார் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், நகரில் உள்ள உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, உணவகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதி முறைகள் தொடர்பாகவும் சுகாதார    விதிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

உணவக அமைவிடமும் சுற்றாடலும், கட்டடத்தின் தன்மை, இடவசதி காற்றோட்டம், உணவு தயாரித்தலும் பரிமாறலும், உபகரணங்கள், தளபாடங்கள், உணவைக்களஞ்சியப்படுத்தல், நீர் வழங்கல், கழிவு அகற்றல் முகாமைத்துவம், உணவுகளின் தரம் நியமம் பாதுகாப்பு பற்றி விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், உணவு கையாள்பவர்களின் சுகாதார நிலையும் பயிற்சியும், எழுத்து மூலமான அறிவுரைகளை மக்களுக்கு காட்சிப்படுத்தி வைத்தல், முதலான பத்து தலைப்புக்களில் இவர்களுக்கான விழிப்புணர்வும் அறிவுரைகளும் பொது சுகாதார பரிசோதகர்களால் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .