2025 ஜூன் 25, புதன்கிழமை

கரிமலையூற்று பள்ளிவாயல் உடைப்பு

George   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.அப்துல் பரீத்

கிண்ணியா திருமலை வெள்ளைமணல் கரிமலையூற்று பள்ளிவாயல், நேற்று சனிக்கிழமை (16) இரவு முற்றாக உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பார்வையிடுவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (17) குறித்த இடத்திற்கு சென்ற போது, இராணுவத்தினர் தம்மை செல்லவிடாது தடுத்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு குறித்த பிரதேசத்தில் கடும் மழை பெய்ததாகவும் இந்த நேரத்தில் பள்ளிவாயல் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர்.

கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு குறித்த பள்ளிவாயலின் கோபுரம் வழமையாக தென்படும் நிலையில், நேற்று இரவு முதல் கோபுரம் தெரியவில்லை என பொதுமக்களிடம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து குறித்த இடத்திற்கு பொதுமக்களும்  பிரதேச முக்கியஸ்தர்களும் பள்ளிவாயல் நிர்வாகத்தினரும் சென்றுள்ளனர்.

எனினும் அதனை பார்வையிட இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்.

2007ஆம் ஆண்டு முதல் குறித்த பிரதேசம் இராணுவத்தின்  கட்டுபாட்டில் உள்ளதுடன் 2009ஆம் ஆண்டு, குறித்த பிரதேசத்தில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இசம்பவம் தொடர்பில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரியவை  தொடர்பு  கொண்டு கேட்ட போது, சம்பவம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

இந்த பள்ளிவாயல் 1733ஆம் ஆண்டு கட்டப்பட்டதுடன் 400 வருடங்கள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .