2025 ஜூன் 25, புதன்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது தொடர்பான கூட்டம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


 திருகோணமலை மாவட்டத்தில் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது தொடர்பான கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று சனிக்கிழமை(16)  நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி குகவதனி பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளர் பிரியந்த மாயதுன்ன, அமைச்சின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், நீர்ப்பாசன மற்றும் நீர்விநியோக சபை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகித்தல், பாதிக்கப்பட்டோருக்கு வேலைக்கான ஒப்பந்தம் என்ற அடிப்படையில் நிதியுதவி அளித்தல் என்பன தொடர்பான தீர்மானங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டன.

இந்த வேலைத்திட்டங்கள் யாவும் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .