2025 ஜூன் 25, புதன்கிழமை

கரிமலையூற்று பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு உறுப்பினர்கள் முடிவு

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்,வடமலை ராஜ்குமார்


திருகோணமலை மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கரிமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு பல்கட்சி உறுப்பினர்கள் சென்று பார்வையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிவாசல் இடிப்பு தொடர்பில், கிழக்கு மாகாண சபையில் காரசாரமான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாகாண சபை உறுப்பினர் மொகமட் ரமலான் அன்வரால் இது தொடர்பான அவசர பிரேரணையொன்று சபையில் சமர்பிக்கப்பட்டது.

இந்த விவாதத்தின் போது, உறுப்பினர்களால் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, பாதுகாப்புத் தரப்பின் அனுமதி பெற்று உண்மை நிலையை அறிய ஒரு வார காலத்திற்குள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுவோன்றை நேரில் அழைத்து செல்வதாக முதலமைச்சரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .