2025 ஜூன் 25, புதன்கிழமை

திருகோணமலை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவுக்கு புதிய தலைவர்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன்


திருகோணமலை பொது வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் புதிய தலைவராக லயன் பாலசிங்கம் உதயசங்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர் து.தவக்கொடிராஐh தலைமையில் நடைபெற்ற வைத்தியசாலைக்குழுவின் முதலாவது கூட்டத்தில் 2014 - 2017 காலப்பகுதிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு நடைபெற்றது.

குழுவின் உபதலைவர்களாக என்.யே.மானவடு, ஏ.எஸ்.ஐவாகீர் மற்றும் நிமால்காமினி ஆகியோரும் செயலாளராக பி.பி.எம். நிகாரும், உபசெயலாளராக எஸ்.கீதபொன்கலனும், பொருளாளராக லயன்.வ.சச்சிதானந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.

சென்ற யூலை மாதம் 30ஆம் திகதி சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வைத்தியசாலைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை கொழும்பில் வைத்து வழங்கி இருந்தார்.

இதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட 29 உறுப்பினர்கள் கலந்து கொண்ட வைத்தியசாலைக்குழுவின் முதலாவது கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தெரிவு நடைபெற்றது.

திருகோணமலை பொது வைத்தியசாலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் மிக அண்மையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிட்த்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .