2025 ஜூன் 25, புதன்கிழமை

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தியைக் முன்னெடுக்க வேண்டும் : நஜீப் ஏ. மஜீத்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.அப்துல் பரீத்

எமது கிழக்கு மாகாணம் 30 வருட யுத்தத்தில் பல்வேறு அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்து, தற்போதைய சமாதான காலத்தில் அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் அதேவேளை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தியைக் கொண்டு செல்வது எமது இன்றைய தேவைப்பாடாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.

 ஜனதாஸ்கன் (துயயெவாயளமயn) நிறுவனத்தின் அனுசனையில் உயிரியல் வாயு (டீழைபுயள தொடப்பிலான பயிற்சி பட்டறை திருகோணமலை வரோதய நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரமத செயலாளர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இப்பயிற்சி பட்டறையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'இலங்கையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதி செய்யவும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை உயிரியல் வாயு தொழிநுட்பத்தை பயன்படுத்தி விரிவாக்குதல் சம்மந்தமாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்கலந்துரையாடல் முக்கியமான ஒன்றாகும்.

இங்கு இது சம்மந்தமாக பல்வேறு ஆக்கபூர்வமான கருத்;துக்கள் முன்வைக்கப்பட்டன. இதன் பின்னர் இடம்பெறும் கலந்துரையாடலோடும் நல்ல பல கருத்துக்கள் முன்வைக்கப்படும் என நம்புகின்றேன். அபிவிருத்தி என்பது நிலைத்திருக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அதன் பலாபலன்கள் அர்த்தமற்றதாகிவிடும். அபிவிருத்தியை நோக்கி ஒரு பிரதேசம் அல்லது நாடு நகரும் போது அங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். சுற்றுச் சூழலையும் பாதுகாத்து அபிவிருத்தியையும் மேற்கொள்வதற்கு உயிரியல் வாயு தொழிநுட்பத்தை விரிவாக்கல் செயற்றிட்டம் முக்கியமானதொன்றாகக் கருதுகின்றேன்.

தேசிய ரீதியில் எமது மாகாணம் பசுமை நிறைந்த மாகாணமாகும். சுற்றாடல் பாதிப்பு குறைவாகவுள்ள மாகாணமாகவும் இனங்காணப்பட்டுள்ளது. இதனை நாம் நிலைத்திருக்கச் செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடிருக்கி;ன்றது. இதற்கான வேலைத்திட்டங்களை செய்வதற்கு உள்ளுராட்சி நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்;. உள்ளுராட்சி நிறுவனங்கள் எதிர் நோக்கும் கழிவகற்றல் சம்மந்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மத்திய சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை செய்வதற்கு முதலமைச்சர் என்ற வகையில் நடவடிக்கை எடுத்துள்ளேன். அவர்கள் அதற்கு தயாராக இருக்கின்றார்கள். உள்ளுராட்சி மன்றங்கள் அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும் என கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் எமது மாகாணத்தை சுற்றுலா முக்கியத்தும் வாய்ந்த பிரதேசமாக மாற்றி சுற்றுச் சூழல் பாதுகாப்புமிக்க பிரதேசமாக நிலைநிறுத்தி தேசிய ரீதியில் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்கு கழிவகற்றல் பிரச்சினையைத் தீர்ப்பது மிக முக்கியமானதாகும். அதற்காக இங்கு குறித்துக்காட்டப்படும் உயிர்வாயு தொழிநுட்பத்;தினைப் பயன்படுத்துவதன் மூலம் பசுமைப் பிரதேசமாக எமது மாகாணத்தை மாற்றியமைக்க முடியும். மேலும் நிலையான அபிவிருத்தியை நோக்கி செல்வதோடு, மக்களுக்கு சுகாதாரமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இது போன்ற வேலைத்திட்டங்கள் பங்களிப்புச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

அத்துடன் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளையும் ஏனைய மாகாணங்களின் அனுபவ பகிர்வுகளையும் கவனத்தில் கொண்டு எமது மாகாணத்திலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் இதனூடாக வறுமையைக் குறைப்பதற்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்யத்தக்க வகையிலான தி;ட்டங்களை வகுத்து செயற்படுத்துதல் வேண்டும். இதற்கு என்னாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு இச்சந்தர்ப்பத்தில் தயாராகவுள்ளேன'; என முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் அதன் செயலாளர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர்கள், அரச வங்கிகளின் பிரதிதிகள் ஆகியோர்; கலந்து கொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .