2025 ஜூன் 25, புதன்கிழமை

தமிழ் இராணுவ வீராங்கனைகள் பயிற்சி முடிந்து வெளியேற்றம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-
எஸ்.சசிக்குமார்


மூன்று மாத கால இராணுவ பயிற்சியை முடித்துக் கொண்ட 36 தமிழ் இராணுவ வீராங்கனைகள் இன்று(23) வெளியேறினார்கள்.
இந்த வெளியேறும் நிகழ்வானது 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் இருந்து  இராணுவத்தில்  இணைந்து கொண்டவர்களே இவ்வாறு பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறினர்.

கிழக்கு மாகாணத்தில் புதிதாக இதணைந்து கொண்ட தமிழ் இராணுவ வீராங்கனைகளின் வெளியேறும் முதலாவது நிகழ்வு இதுவாகும்.

பிரிகேடியர் சண்முகநாதன் பிரதம அதிதியாக  கலந்து கொண்டு இராணுவ வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். 

திறமையான வெளிப்பாடுகளை வெளிப்படுத்திய  மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த  தெய்வேந்திரன் ரஞ்சதா  கௌரவப்படுத்தப்பட்டார். இவருக்கான பட்டியையும் பிரகேடியர்அணிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 16 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இரந்து 15 பேரும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 5 பேரும் புதிதாக இராணுவ வீராங்கனைகளாக  வெளியேறினார்கள்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .