2025 ஜூன் 25, புதன்கிழமை

இ.த.க.வின் மூதூர் தொகுத்திக்கான உறுப்பினர்கள் தெரிவு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


இலங்கை தமிழரசுக் கட்சியின் மூதூர்; தொகுதிக்கான தலைவராக முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் க.திருச்செல்வமும் செயலாளராக எஸ்.தரஷனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பொருளாளராக முன்னாள் பிரதிக்கல்வி பணிப்பாளர் ஆ.குணராசரெட்ணமும்; 15 பேர் கொண்ட செயற்குழுவும் இதன்போது தெரிவு செய்யப்பட்டது.

நிர்வாகிகள் தெரிவு ஞாயிற்றுக்கிழமை (24) திருகோணமலை, பட்டித்திடலில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெடணசிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜனார்த்தனனன், பட்டணமும் சூழலும் பிரதேசசபை தலைவர் எஸ்.விஜேந்திரன், நகரசபை தலைவர் க.செல்வராசா ஆகியோர்  கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .