2025 ஜூன் 25, புதன்கிழமை

இ.த.அ. கட்சிக்கான திருகோணமலை தேர்தல் தொகுதிக்கு நிர்வாகிகளை தெரிவு கூட்டம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


இலங்கை தமிழ் அரசு கட்சிக்கான திருகோணமலை தேர்தல் தொகுதிக்கு நிர்வாகிகளை தெரிவு கூட்டம் இன்று திங்கட்கிழமை (25)  திருகோணமலை பொது நூல் நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு கலந்துரையாடப்படும் விடயங்கள்  பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.  இரகசியமான முறையில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.

46 கிளைகளில் இருந்து  தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.  84 பேர்  இக்கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன். ஜெ.ஜனார்தனன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

இதன்போது தலைவராக முன்னாள் துறைமுக அதிகார சபை அத்தியட்சகர் கோ.சத்தியசீலராஜா தெரிவுசெய்யப்பட்;டார். செயலாளராக திருகோணமலை நகராட்சி மன்றத் தலைவர் க.செல்வராசா, பொருளாளராக பிரதேச சபையில் உறுப்பினரான எஸ்.கோணேஸ்வரநாதன், உபதலைவராக நிலாவெளியின் கூட்டுறவுச் சங்க தலைவர் க.தம்பிஐயா தெரிவுசெய்யப்பட்டனர்.

இவர்கள் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டவர்களாவர்.

உப செயலாளர் பதவிக்கு வெ.சுரேஷ்குமார், து.தனுராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். இத்தெரிவை மேற்கொள்ள இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வெ.சுரெஷ்குமாருக்கு 34 வாக்குகளும். து.தனுராஜ்க்கு 44 வாக்குகளும் கிடைக்கப் பெற்றது. 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது.

12 மேலதிக வாக்குகளால் அன்பு இளைஞர் கழக தலைவரான து.தனுராஜ் உப செயலாளராக தெரிவானார்.

10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு 20 பேரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டது. இதன் பின்னர் நால்வர் தங்களை விலக்கிக் கொண்டார்கள். இந்த 16 நபர்களையும் நிர்வாக  குழுவிற்கு உள்வாங்குவதற்கு ஆலோசிக்கப்படுகின்றது. இத் தெரிவு இன்னும் பூர்த்தியாக்கப்பட்வில்லை.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .