2025 ஜூன் 25, புதன்கிழமை

கிண்ணியா கடற்படை முகாம் அகற்றப்படும்

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.அப்துல் பரீத்

கிண்ணியா கடற்படை முகாம் எதிர்வரும் 28 திகதி வியாழக்கிழமையுடன் அகற்றப்படவிருக்கின்றது என்று கிண்ணியா நகர சபைத் தவிசாளர் டொக்டர் எம்.எம்.ஹில்மி தெரிவித்தார்.

இந்த முகாம் இருந்த இடமும் கட்டடங்களும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்
ஜனாதிபதி இவை தொடர்பாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு பணித்தமைக்கு இணங்க இந்த முகாம் அகற்றப்படுகின்றது.

சுகாதார அமைச்சிற்குரிய இடத்திலிருந்த இந்த முகாமை அகற்றுவதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

கிண்ணியா நகர சபைத் தலைவர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் இவை தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரிடம் அடிக்கடி புகார் தெரிவித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .