2025 ஜூன் 25, புதன்கிழமை

கடற்படையினர் குடிகொண்டிருந்த தாதியர் விடுதி கையளிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


கிண்ணியா தள வைத்தியசாலைக்குச் சொந்தமான தாதியர் விடுதி, பத்து வருடங்களுக்குப் பின்னர் கடற்படையினரால் மீண்டும் வைத்தியசாலைக்கு வியாழக்கிழமை(28) கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கடற்படைத்தளபதி லெப்டினன் கொமாண்டர் ஏ.கே.எஸ்.கருணாதிலக்கவினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக விடுதி கையளிக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் கிண்ணியா தள வைத்தியசாலை முழுமையாக சேதமாக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தப் பிரதேசத்தில் வைத்தியசாலைக்கு எதிரேயுள்ள கடற்கரை ஓரமாக இருந்த தாதியர் விடுதியில் கடற்படையினர் தளம் ஒன்றை அமைத்தனர்.

சுனாமி அனர்த்தத்தின் பின்னர், வைத்தியசாலை கிண்ணியா பிரதான வீதியில் புதிய காணி ஒன்றில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது. தற்போது இவ் வைத்தியசாலை தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் தாதியர் விடுதி மற்றும் வைத்திய அதிகாரிகள் விடுதி போன்றவற்றுக்கான தேவையேற்பட்டுள்ளது.

இதனால் இதனை மீண்டும் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சியின் பயனாக வியாழக்கிழமை(28) அந்த விடுதி மீண்டும் வைத்தியசாலைக்கு  கையளிக்கப்பட்டது.

இந்த வைபவத்தில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.மன்சூர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.ஹில்மி, கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாதுள்ளா உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .