2025 ஜூன் 25, புதன்கிழமை

துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


மூதூர் கிழக்கு பாடசாலைகளான பாட்டளிபுரம் அ.த.க. பாடசாலை, கட்டை பறிச்சான் விபுலாந்தா வித்தியாலயம், பள்ளிக்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் என்பனவற்றில் கல்வி பயிலும் மாணவர்கள் 21 பேருக்கு துவிச்சக்கரவண்டிகள் இன்று(31) வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வு திருகோணமலை ரொட்டறி கழகத்தின் தலைவர் திருமதி காமலின் அன்ரனியின் தலைமையில்  கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பில்டிங் புளொக்ஸ் அமைப்பின் ஊடாக கிடைக்கப்பெற்ற இத் துவிச்சக்கர வண்டிகளை திருகோணமலை ரொட்டறி கழகத்தினர் மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

பாட்டாளிபுரம் அ.த.க.பா மாணவர்கள் 5 பேர். கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலய மாணவர்கள் 9 பேர், பள்ளிக்குடியிருப்பு கலைமகள் வித்தியாலய மாணவர்கள 7 பேர் துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக் கொண்டனர்.

இவர்களுடன் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மூதூர் மாணவி ஒருவருக்கு சனிக்கிழமை இச்; சைக்கிள் வழங்கி வைக்கப்பட்டது.

மருத்துவர் ஈ.ஜி. ஞானகுணாளன் இந்நிகழ்வை நெறிப்படுத்தனார். இதில் பொது சுகாதார பரிசோதகரும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பிரதானியுமான  கு. சரவணபவனும் கலந்து சிறப்பித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .