2025 ஜூன் 25, புதன்கிழமை

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை திறப்பு விழா

Thipaan   / 2014 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிழக்கு மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை, கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜய விக்ரம மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் ஆகியோரால்  நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் மற்றும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் அழைப்பின் பேரில் வருகை தரவிருக்கும் ஆளுனர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோராலேயே பொது மக்கள் பயன்பெறும் வண்ணம் இவ்வதிகாரசபை திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் கல்வி, காணி மற்றும் காணி அபிவிருத்தி, கலாசார அமைச்சின் அமைச்சர் விமலவீர திஸாநாயக, சுகாதார, சுதேச வைத்தியம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், விவாசாய, கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சர் ஸட். ஏ. ஹாபிஸ் நஸீர் அகமட், கிழக்கு மாகாண சபையின் தலைவி ஆரியவதி கலபதி மற்றும் பிரதி தலைவர் எம். எஸ். சுபைர் ஆகியோரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், பிரதம செயலாளர், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மற்றும் அரச உயரதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .