2025 ஜூன் 25, புதன்கிழமை

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை அலுவலகம் திறந்து வைப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 01 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


 கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை அலுவலகம் திருகோணமலை கிறீன் வீதியில் இன்று திங்கட்கிழமை (01) காலை  திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசனம். வீடமைப்பு கிராமிய மின்சார அமைச்சர் மீரா சாகிபு உதுமாலெப்பையின் அழைப்பின் பேரில்  கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம இதனை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மாகாண சபை தவிசாளர், ஆரியபதி கலபதி  அமைச்சர்களான விமலதீர திசாநாயக்கா. மன்சூர், ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஆளுநரும் முதல் அமைச்சரும் அலுவலகத்தின் விரந்தினர் பதிவேட்டில் கையொப்பமிட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தனர்.
வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளராக ஏ.எஸ்.எம் பாயிஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதிகார சபை அலுவலகம் திறப்பின் நினைவாக  ஆளுநருக்கும், முதல் அமைச்சருக்கும்  அமைச்சர் உதுமாலெப்பை நினைவுச் சின்னம் வழங்கி  கௌரவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .