2025 ஜூன் 25, புதன்கிழமை

தொடர் சைக்கிளோட்டம் திருகோணமலையை சென்றடைந்தது

Thipaan   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிகுமார், எஸ். கீதபொன்கலன்


தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை வெள்ளிக்கிழமை (05) வந்தடைந்தது.

ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகிய தொடர் சைக்கிளோட்டம் சிலாபம் சென்று அங்கிருந்து அனுராதபுரம் ஊடாக கிளிநொச்சி சென்று அங்கிருந்து புதன்கிழமை புறப்பட்டு யாழ்ப்;பாணத்தை அடைந்து.

பின்னர் முல்லைத்தீவுக்கு சென்று அங்கிருந்து திருகோணமலையை நேற்று வந்தடைந்தது.

திருகோணமலை ரொட்டறி கழகத்தின் தலைவர் திருமதி காமன் அன்ரனி தலைமையிலான அங்கத்தவர்கள், திருகோணமலை பிரதான  பஸ் தரிப்புநிலையத்துக்கு அண்மையிலுள்ள வாகன தரிப்பிடத்தில் வைத்து சைக்கிளோட்ட குழுவை வரவேற்றனர்.

'சிசிசி 1333 (CCC1333)' என்னும் இலவச ஆலோசனை வழங்கும் தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதனை நோக்காக கொண்டு, இலங்கையின் 12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக தொடர் துவிக்சக்கர வண்டியோட்ட நிகழ்வை நடாத்தி வருகின்றது.

இத் தொடர் சைக்கிளோட்டமானது திருகோணமலைக்கு வந்தடைந்த தன்  தற்கொலையின் தாக்கம் குறித்து மக்களை விழிப்பூட்டும் வகையில் தெருக்கூத்து ஒன்று நடாத்தப்பட்டது.

தைரியம், இரக்கம், பொறுப்பேற்றல் என்ற பெயரையுடைய, நிறுவனமும், திருகோணமலை ரொட்டறி கழகமும் இணைந்து இதனை ஏற்பாடுசெய்தன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .