2025 ஜூன் 25, புதன்கிழமை

'மாணவர்களின் ஆளுமை விருத்தியினூடாக, விசேட தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு பராமரிக்க முடியும்'

Thipaan   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -ஏ.எம்.அப்துல் பரீத்


விசேட தேவையுடைய மாணவர்கள் எமது பாடசாலையில் இல்லாவிட்டாலும் இவ்வாறான மாணவர்கள் யார், அவர்கள் எவ்வாறான தன்மைகளை வெளிக்காட்டுவார்கள் என்ற விடயங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும் என கிண்ணியா அல் முஜாஹிதா வித்தியாலய அதிபர் எஸ்.டி.நஜீம் இன்று(13)  தெரிவித்தார்.

கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தின் விசேட கல்விப் பிரிவினரால், அல் முஜாஹிதா வித்தியாலயத்தில் நடைபெற்ற  விசேட தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு அவர்களை எவ்வாறு முகாமை செய்வது தொடர்பான செயலமர்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வழமைக்கு மாறான செயல்களை வெளிக்காட்டும் இம்மாணவர்களை, சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதிலிருந்து மாணவர்களாகிய நீங்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.

உடல் ரீதியாக மட்டுமல்லாமல் உளரீதியாகவும் சில மாணவர்கள் விசேட தேவைக்கு ஆளாகின்றனர்.

இவர்களை நிதானமாக இனங்கண்டு அவர்களின் உள ரீதியான தேவைகளை நிறைவேற்றுகின்ற போது அல்லது அதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குகின்ற போது அவர்கள் சமூகத்தில் ஒன்றிணைந்து செயற்படக் கூடியவர்களாக மாற வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.

இச்செயலமர்வுக்கு வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.எம். நளீம் கலந்து கொண்டிருந்தார்.

இச்செயலமர்வில் ஆசிரிய ஆலோசகர்களான ஏ.ஆர். ஹஸ்ஸாலி, ஏ.எம். அனிபா ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு செயற்பட்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .