2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சுகாதார சேவை உதவியாளர் பரீட்சகருக்கு கருத்தரங்கு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


கிண்ணியா பிரதேசத்தில்  சுகாதார சேவை உதவியாளர் (பரீகாட்சகர்) போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவோருக்கு  வியாழக்கிழமை (25) மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாவட்ட காரியாலத்தில்  கருத்தரங்கொன்று நடைபெற்றது. 

கிண்ணியா கோட்டக் கல்வி பணிப்பாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் ஆசிரியர் காங்கிரஸின் தலைவருமான ஏ.அஹது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம் கலந்துகொண்டார்.

இதன்போது, வளவாளர்களாக கிண்ணியா மாவட்ட சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர் எஸ்.எம்.தாரீக் அம்பாறை  மாவட்ட வைத்தியசாலை சிரேஷ்ட உத்தியோகத்தர் பீ.நசூர்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருமுலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் சுமார் 112 பேர் பங்கேற்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .