2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தொழில் பயிற்சி வழங்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொழில் பயிற்சி வழங்கப்பட்ட இளைஞர், யுவதிகள் 1327 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்கள் திங்கட்கிழமை (13) திருகோணமலை  ஜெகெப் பார்க் ஹோட்டலில் வைத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகபெரும,  கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியவதி கலப்பதி, யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரி திருமதி.கரொலின் பக்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் ஆகியவற்றின் பங்களிப்புடன்  COLOMBO INTERNATIONAL NAUTICAL & ENGNEERING COLLEGE (CINEC)  தொழில்பயிற்சி கல்லூரியில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் பயற்சி பெற்றனர்.
கடந்த 2013 ஜுலை மாதத்திலிருந்து 2014 மே மாதம் வரை இப்பயிற்சி நடைபெற்றது.

இதன்போது, கிழக்கைச் சேர்ந்த 939 (510 ஆண்கள், 429 பெண்கள்) பேர், வடக்கைச் சேர்ந்த 388 (160 ஆண்கள், 228 பெண்கள்) பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதேவேளை, பயிற்சிகளை சிறப்பாக முடித்த பயிலுனர்கள் 442 பேருக்கு 7.5 மில்லியன் ரூபாய் செலவில் அவர்கள் கற்றுக்கொண்ட தொழிற்துறைக்குரிய உபகரணப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .