2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அரசாங்கத்திடமோ மாகாண சபைகளிடமோ வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பிரத்தியோக திட்டங்கள் இல்லை : ஜெனார்

Gavitha   / 2014 நவம்பர் 09 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பிரத்தியோக திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடமோ மாகாண சபைகளிடமோ இல்லை என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட கன்னியா மாங்காயூற்று கிராமத்திலுள்ள பெண்தலைமை தாங்கும் குடும்பங்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், 06 குடும்பங்களுக்கான ஆடுகளை கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (09) கன்னியா மாங்காயூற்று கிராமத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்றம் மற்றும் மாகாணசபைகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிகள் போதுமானதாக இல்லை. வடகிழக்கில் யுத்தத்துக்கு  பின்னரான இன்றைய சூழலில், பல்லாயிரக்கணக்கான பெண்கள் உழைப்பாளிகளான தமது கணவன்மார் மற்றும் சகோதர்களை இழந்துள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் இன்று பெரும் கேள்விக்குறியாகவுள்ளது.

2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திலும் கூட, பெண் தலைமையிலான குடும்பங்களின் வாழ்வாதாரம் தொடர்பாக அரசாங்கத்தால் விசேட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதாக தெரியவில்லை.

எனவே, இவர்களுக்கான விசேட கவனத்தை அரசாங்கம் எடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தினையும் காப்பாற்ற முடியும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள உதவிப் பணிப்பாளர் டாக்கடர்.பி.புவனேந்திரன், விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய உத்தியோகத்தர் வ.ராஜ்குமாhர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள உதவிப் பணிப்பாளர் டாக்கடர்.பி.புவனேந்திரன் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .