2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மூதூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி

Thipaan   / 2014 டிசெம்பர் 06 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


யுத்தத்தின் பின் மீள் குடியேற்றயேற்றப்பட்டுள்ள மூதூர் கிழக்கு மக்களுடைய உற்பத்திகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கிலான கண்காட்சி, மூதூர் கிழக்கு கட்டைபறிச்சான் பொதுச்சந்தை வளாகத்தில், நேற்று வெள்ளிக்கிழமை(05) ஆரம்பமானது. இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை(07) வரை நடைபெறவுள்ளது.

திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால், சுவீடன் கூட்டறவு நிறுவன நிதி உதவியின் ஊடாக கூட்டறவு சங்கங்களை வலுவூட்டி அதன் மூலமே இக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதன் ஆரம்பநிகழ்வின் போது பிரதம விருந்தினரான கிழக்கு மாகாண கூட்டுறவு உதவி ஆணையாளர் திருமதி ராஜினி கணேசப்பிள்ளை, சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் டி.மயூரன், கட்டைப்பரிச்சான் இராணுவ முகாம் அதிகாரி ரணதிலக, திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனத் தலைவர் வ.கலைச்செல்வன், அகம் நிறுவன இணைப்பாளர் க.லவகுகராஜா மற்றும் மதியுரைஞர் பொ.சற்சிவானந்தம் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்க தலைவர் வ.ராஜ்குமார் ஆகியோரும் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
 
இத்திட்டத்தினூடாக மூதூர் இத்திக்குளம் இளக்கந்தை நவரெட்ணபுரம் ஆகிய கிராம கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தியதுடன் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள அணைத்து கிராமிய அமைப்புக்களின் உற்பத்திப் பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டதுடன் விற்பனையும் இடம் பெற்றமையை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .