2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

Thipaan   / 2014 டிசெம்பர் 07 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத், எஸ்.சசிக்குமார்

திறனும் ஈடுபாடுமுள்ள இளைஞர்களை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அம்சமாக, சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் அனுசரனையுடன் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு  கருத்தரங்கு  திருகோணமலை சில்வஸ்ட்டார் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை(06) நடைபெற்றது.

குச்சவெளி பிரதேசத்திலுள்ள பாடசாலை அதிபர்,கிராம சேவை உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர் மற்றும் இளைஞர்கள் ஆகியோருக்கு இவ் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது..

இக்கருத்தரங்கில், குச்சவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.எல்.ஜெயநேசன் வளவாளராக கலந்து கொண்டார். திட்ட இணைப்பாளர் ஆர்.அரியரத்தினம். முகாமையாளர் கே.வினோபரன் ஆகியோரும்; கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசத்தில் யுத்தத்துக்;கு பிற்பட்ட காலத்தில் அதிகமான இளவயது திருமணம் நடந்து வருவது பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியும் இதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.

பாலியல் அறிவு சம்மந்தமான விழிபபுணர்வு, இளம் வயதினரிடையே இல்லாததால்  பல இளவயது திருமணமங்கள் நடக்கின்றன. இதனால் எம்மை அறியாமலே வளமற்ற சமுதாயம் உருவாகிக் கொண்டு போகின்றது. இதனைத் தடுக்க வேண்டியது நம் அனைவரினதும்  கடமையாகும்.

இளவயது கர்ப்பமானது பல உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சரியான புரிந்துணர்வு இன்மையால் அனேகமான குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன.

இளவயதில் குழந்தைகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படக்கூடிய ஆபத்து, கருச்சிதைவு, குடும்பக்கட்டுப்பாடு சம்மந்தமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை கிராம சேவகர் பிரிவு தோறும் செய்ய வேண்டியுள்ளது என முகாமையாளர் வினோபரன் தெரிவித்தார்.
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .