2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை மாவட்ட, தொண்டர் ஆசிரியர் சங்கம் அழைப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், எஸ்.சசிக்குமார்

திருகோணமலையில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை புதிய அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் மூலம் பெற்றுத்தரக் கோரி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்ட, தொண்டர் ஆசிரியர் சங்கமானது தமது சங்கத்தின் 140 அங்கத்தவர்களின்  பெயர் விவரங்களை பூர்த்திசெய்வதுடன் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் செயற்பாடொன்றை மேற்கொள்ளவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை (11) காலை 8.00 மணி முதல் திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்தின் முன்னால் இத்தரவுகள் சேகரிக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.

எனவே, கடந்த காலங்களில் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்து நிரந்தர நியமனம் கிடைக்காது பாதிக்கப்பட்ட அனைவரும் தவறாது தமது தரவுகளை  பதிவுசெய்யுமாறு திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இரா.ஜெயமோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 077-4324195 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .