2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

புதிய பள்ளிவாசல் திறந்துவைப்பு

Thipaan   / 2015 மார்ச் 07 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா, ஹிஜ்ரா வீதியில் மூன்று கோடி ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் சவூதி அரேபியாவைச் சேர்ந்த அஷ்செய்ஹ் காலித் இப்னு இப்றாஹிமால், வெள்ளிக்கிழமை(06) திறந்து வைக்கப்பட்டு இங்கு முதலாவது ஜ}ம்ஆ தொழுகையும் இடம்பெற்றது.

திருமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பள்ளிவாசல் தலைருமான எம்.ஏ.எம்.மகரூபின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

வாழ்வும் மரணமும் என்ற தலைப்பில் குத்பா பிரசங்கத்தை அஷ்சேஹ் எம்.சி.அன்ஸாரும் ஜும்ஆ தொழுகையின் பின் சிறப்புரையினை சவூதி அரேபியாவைச் சேர்ந்த அஷ்சேஹ் அஸீஸ் குமைன் மற்றும்  அஷ்சேஹ் என்.பீ.எம்.அபூபக்கர் சித்தீக் மதனி ஆகியோரும் நிகழ்த்தினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .