2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் முஸ்லிம் அதிகாரியை நியமிக்குமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2015 மார்ச் 17 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பொருத்தமான பதவியொன்றுக்கு முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திருகோணமலை மாவட்டத்தில் 40 சதவீதத்துக்கும் மேல் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனினும், மாவட்ட செயலகத்தில் பொறுப்பு வாய்ந்த எந்த பதவிகளிலும் முஸ்லிம் அதிகாரிகள் இல்லை. இதனால் இம்மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பாரிய மனக்குறை உள்ளது.

எனவே, இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஏதாவதொரு பொறுப்பு வாய்ந்த பதவிக்கு முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.

மொரவௌ பிரதேச செயலகத்துக்கு நிரந்தர பிரதேச செயலாளர் இல்லாததால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தம்பலகமம், குச்சவெளி பிரதேச செயலகங்களில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வந்த போதிலும் அங்கு பொறுப்பு வாய்ந்த பதவியெதிலும் முஸ்லிம் அதிகாரிகள் இல்லை. எனவே, அப்பிரதேச செயலகங்களில் குறைந்தது முஸ்லிம் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களை நியமிக்க வேண்டும்.

மூதூர் பிரதேச செயலகத்தில் கணிசமான அளவு தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த போதிலும் அங்கு பொறுப்புவாய்ந்த பதவியொன்றில் தமிழ் அதிகாரி எவருமில்லை. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு மூதூரில் கடமை புரியும் கணக்காளரை கிண்ணியாவுக்கு இடமாற்றி கிண்ணியாவில் கடமை புரியும் கணக்காளரை மூதூருக்கு இடமாற்ற வேண்டும்.

கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் முஸ்லிம்களுக்கு பல்வேறு அநீதிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, எதிர்காலத்தில் இங்கு நியாயமான செயற்பாடுகள் நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பிரதேச செயலகங்களில் நீண்ட காலம் கடமை புரியும் உத்தியோகஸ்தர்களை சுற்றறிக்கைக்கமைய உள்ளக இடமாற்றம் செய்தல்.

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .