Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
கல்வியில் யார் அக்கறை காட்டுகின்றார்களோ, அவர்களே வாழ்க்கையில் வெற்றியடைவார்கள். சமூகத்தின் உயர்வும் தாழ்வும் அச்சமூகத்தின் கல்வியில் மாற்றத்திலேயே தங்கியுள்ளது என உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் கந்தளாய் ஆயிஷா மகளிர் மஹா வித்தியாலயத்தில் மூன்று மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் இன்று (2) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடசாலையின் அதிபர் ஏ.கே.எம்.நசூர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அவர் தொடர்ந்து கூறியதாவது,
'நாட்டில் தற்போது சுதந்திரமும் ஜனநாயகமுமான சூழலொன்று உருவாகி வருகின்றது இச் சூழலில் எம்மை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். வினைத்திறன் மிக்க கல்வியியல் சமூக மாற்றத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. புதிய ஆட்சியில் கல்விக் கொள்கைகளை அரசு திறம்பட செயற்படுத்தும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியிலும் கல்வியலாளர்களின் செயற்பாட்டு அறிக்கைகள் மூலமாகவும் புரிந்துகொள்ள முடியுமாக உள்ளது.
மாணவர்கள் அக்கறையுடன் கல்வி நடவடிக்கைகளிலும், புறக்கீர்த்தி விடயங்களிலும் தங்களது ஆர்வத்தையும், உற்சாகத்தையும் முழுமையாக காட்ட வேண்டும் அப்போதுதான் எமது அடைவுகளும் பெறுபேறுகளும் திறம்பட அமையும். தங்களது பாடசாலையில் நடைபெற்று முடிந்த சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த சித்திகளை பெற்றுள்ளனர். அதேவேளை தொடர்ச்சியான் கல்வி நடவடிக்கைகளில் ஆசிரியர் சமூகத்தின் பங்களிப்பு அளப்பரியது அவர்களின் முயற்சியினை பாராட்டுகின்றேன்.
வெறுமனே கட்டிடங்களை கட்டுவதன் மூலம் கல்வியில் மாற்றம் ஏற்படப்போவதில்லை சுயகற்றல், கற்பித்தல், அவதானம், கிரகித்தல், பொதுத்திறன் என்பவற்றில் ஆசிரியர்களின் பங்களிப்பும், மாணவர்களின் முயற்சியும் இருக்க வேண்டும்.
கற்றல், கற்பித்தலுக்கான சூழல் நிச்சயமாக தேவை. அதேவேளை பாடசாலை சமூகத்தின் திறன் விருத்தி அப்பிரதேசத்தின் கல்வியிலும் நல்ல விழுமியங்களை உருவாக்குவதிலும் செல்வாக்கு செலுத்தும் நாட்டிலே தற்போது தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது. அதுதொடர்பாக எமது கட்சியின் உயர்மட்டம் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றது.
சிறுபான்மை சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தில் சிக்கல்கள் ஏற்படுமாயின் எமது கட்சி நிச்சயமாக மக்களுக்காக குரல் கொடுக்கும் அதேவேளை, மக்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க என்றும் மக்களுடன் சேர்ந்து செயற்படும் என்பதை இந்நேரத்தில், கூறி வைக்க விரும்புகின்றேன்.
நிகழ்வில் கந்தளாய் வலயக் கல்விப் பணிப்பாளர் ஐ.ஆர்.ஜயசுந்தர மற்றும் கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் கே.எம்.நிஹார், கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஏ.ஜே.எம்.ஜெசீல், சட்டத்தரணி எம்.எம்.முதார் ஆகியோருடன் பாடசாலை அதிபர்கள், அசிரியர் சமூகத்தினர்கள், பெற்றார்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago