2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இக்பால் நகர் பள்ளிவாயல் திறந்து வைப்பு

Thipaan   / 2015 மே 18 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தோப்பூர் இக்பால் நகர்  பள்ளிவாயல் குவைத்நாட்டு மக்களின் நன்கொடை நிதி மூலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு நேற்று (17) திறந்து வைக்கப்பட்டது.

மௌலவி மன்சூரின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் முதல் அமைச்சருமான  நஜீப் அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா வைபவத்தில் பலர் கலந்துகொண்டனர்.

குவைட் இஸ்லாமிய விவகார அமைச்சில் கடமையாற்றும் இஸ்லாமிய கற்கைகள் தொடர்பான சிரேஷ்ட விஷேட நிபுணர் கலாநிதி மன்சூர் என் ஜபாராஹ் பள்ளியை திறந்து வைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .